Monday, January 4, 2021

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுடன் மறத்தமிழர் சேனை நிர்வாகிகள் சந்திப்பு.

 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அனைத்து சமுதாய மக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரில் கேட்பதற்காக 02.01.2021 அன்று மாலை 06.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவர் மகாலில் கூட்டம் நடைபெற்றது.

 

கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். அ.இ.அ.தி.மு.க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.மணிகண்டன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நி.சதன் பிரபாகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார பாண்டியன், மாநில இளைஞர் சேனை செயலாளர் சு.மணிகண்டன் தேவர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் ஆ.பாலமுருகன் தேவர், சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஸ்டான்லி ராஜபாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரியூர் முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக இராமநாதபுரம் அரண்மனை போன்ற வடிவமைப்பை மறத்தமிழர் சேனை சார்பாக வழங்கினர். மாநில அமைப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கோரிக்கை மனுவை வழங்கினார். 

Monday, June 25, 2018

முத்துவடுகநாதத் தேவர் 246 வது நினைவு நாள் - மறத்தமிழர் சேனை பங்கேற்பு


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா 25.06.2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுக நாதத் தேவர் அவர்களது வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது. மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நான்கு மாதங்களுக்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மதுரை நகர் பகுதிகளுக்குள் எழுதப்பட்டிருந்தன. அதேபோல 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தன. காளையார்கோவில் நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் இளையான்குடி ஒன்றிய நிர்வாகிகள் திட்டமிட்டு அனைத்து மாவட்டங்களின் சுவரொட்டிகளையும் ஒட்டி பெருங்கவனத்தை ஏற்படுத்தியிருந்தனர்.


சிவகங்கை சீமை மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் 246 வது நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக சிவகங்கை சீமை வருகைதந்த மாநில, மாவட்ட மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளை கொல்லங்குடி காளி கோவில் வளைவு அருகில் காளையார்கோவில், இளையான்குடி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மறத்தமிழர் சேனை கொடி ஏந்தி தொண்டர்கள் முன் செல்ல வாகனப்பேரணியாக காளையார்கோவில் வந்தடைந்தனர். வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்தேவர் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை அவர்களும் சகா.மணிமுத்து அவர்களும் மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை மேளதாளம் இசைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களது தலைமையில் ஆலோசகர் வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர் மு.முத்துக்குமார் அவர்கள், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்கள், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், மதுரை மாவட்ட பொருளாளர் திருப்பதி அவர்கள், மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன் அவர்கள், மதுரை தெற்கு தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பூ.வாலகிருஷ்ணன் அவர்கள், மதுரை மத்திய தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பா.சதீஸ்குமார் அவர்கள், போடி ஒன்றிய பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள், தேனி மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அருள்ராஜ் அவர்கள், பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள்,  பி.பி.குளம் கிளை செயலாளர் ர.கார்த்திக் அவர்கள், சிம்மக்கல் பகுதி சேனை பொறுப்பாளர்கள் ச.மனோஜ்குமார் அவர்கள், காளிபிரகாஷ் அவர்கள், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை நிர்வாகி விவேக் அவர்கள், சிவகங்கை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அரவிந்த் அவர்கள், சிவகங்கை மாவட்ட மாணவர் சேனை செயலாளர் மா.வசந்த் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தலைவர் நா.திருமுருகன் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் தடியச்சாமி அவர்கள், இளையான்குடி ஒன்றிய துணை தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் ச.முருகானந்தம் அவர்கள் மற்றும் முரளி தேவன், வழக்கறிஞர் அடைக்கலம், ரகுவீர பாண்டியன், கஜேந்திரபாண்டியன்  உள்ளிட்ட பெருந்திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாமன்னர் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.


இளைய ராணி கெளரி நாச்சியார் நினைவிடத்திலும், காளையார்கோவில் ஆலத்தியத்திற்குள் இருக்கும் முத்துவடுகநாதத் தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து புகழ்வணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு அறக்கட்டளை மூத்த நிர்வாகி உருவாட்டி பொன்னுசாமித்தேவர் அவர்கள் விழாக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Wednesday, June 20, 2018

Muthuvaduganatha Periya Udaya Thevar


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.


Friday, April 13, 2018

வைகை நதி மக்கள் இயக்கம் - வைகை காப்போம்


வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன் படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை,
நவீன நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுரை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

Friday, June 24, 2016

குடும்ப மரம்

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

Monday, June 20, 2016

இலட்சினை


🎍 🐚 🎏 💝 🎓 👆 👇 💢 👊 💨 👐 👋 😺 😸 👅 😻 😽 💦🐻 🐷 💩 🐮 👀 👄 💋 💔 💘 🐟 👍 🐳 👎 👉 🐺 🐱 🐭🐹 🐨 🐗 🍎 🍊 🍓 😹 💀 👌 📱 💻 💾 📺 📠 🔔 👃 ⛄ 💏 💑 🎃 👶 🎅 🎄 🎁 🎉 👂 👦 💅 👏 👫 💃 👶 💛 💙 💜💚 💗 💓 💿 📀 💽 🎈 📞 🐵 🍁 💪 🙍 🌂 👌 💖 🐹 🎎 🎐 🎍 🐚 🎏 💝 🎓 👆 👇 💢 👊 💨 👐 👋 😺 😸 👅 😻 😽💦🐻 🐷 💩 🐮 👀 👄 💋 💔 💘 🐟 👍 🐳 👎 👉 🐺 🐱 🐭 🐹 🐨 🐗 🍎 🍊 🍓 😹 💀 👌 📱 💻 💾 📺 📠 🔔 👃 💏 💑 🎃 👶 🎅 🎄 🎁 🎉 👂 👦 💅 👏 👫 💃 👶 💛 💙 💜 💚 💗 💓 💿 📀 💽 🎈 📞 🐵 🍁 💪 🙍 🌂 👌 💖 🐹 🎎🎐

Friday, June 10, 2016

ரிபெல் சேதுபதி மன்னர் சிலை திறப்பு


பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.

மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.


  இந்நிலையில், மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களுக்கு இராமநாதபுரம் நகர் பகுதியில் சிலை நிறுவிட தமிழக அரசிடம் மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து 2010 ஜூலை மாதம் நடைபெற்ற மறவர் அரசியல் உரிமை மாநாட்டில் முதல் தீர்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கடந்த 21.12.2010 அன்று அன்றைய திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தமிழக அரசு ரூ.4,51,620 ஒதுக்கீடு செய்து அரசாணை (அ.எண்:683) வெளியிட்டது. அதன்படி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாறியது.

ஆட்சி மாறியதும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தகவலறிந்த மறத்தமிழர் சேனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் இப்படியொரு அரசாணை போடப்பட்டதற்கான சான்றுகள் இல்லையென்கிற பதில் தான் வந்தது. உடனே, இயக்கத்திடமிருந்த சான்றுகள் அனைத்தும் நகலெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டதோடு, சிலை அமைக்க பணத்தை உடனே ஒதுக்கீடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத்திரட்டி ஏப்-28-2012 அன்று இராமேஸ்வரம் நகரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 


உடனே ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்க ஆட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் 2012 அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட தேவரின இளைஞர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டு பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2013 மே மாதம் விடுதலையாகி வெளியே வந்தவுடன் நிறுவப்பட்ட ரிபெல் சிலையை திறக்க கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக சிலை திறப்பு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பியிருந்த பதில் கடிதத்தில், உச்சநீதிமன்ற வழக்கு எண் 8519/2006 க்கு 18-01-2013 அன்று வழங்கிய இடைக்கால உத்தரவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பொது மற்றும் தனியார் இடங்களில் எந்த ஒரு நபருக்கும் புதிதாக சிலை நிறுவுதல் மற்றும் சிலை திறக்க அனுமதி அளித்தல் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் அதனால்தான் சிலை திறக்கப்படாமல் தாமதமாவதாக தகவல் சொல்லப்பட்டது.

இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புதான் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்க இயலாமைக்கு காரணம் எனில் இந்தியா முழுவதும் 2013 க்கு பிறகு திறக்கப்பட்ட சிலைகளோடு தமிழகத்தில் திறக்கப்பட்ட சிலைகளையும் பட்டியலிட்டு மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், சபாநாயகர்கள், மாவட்ட ஆட்சியர்கள் எப்படி சிலைகளை திறந்தனர் என கேள்வி எழுப்பியதோடு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக முதல்வரின் தனிப்பிரிவில் மனு ( மனு எண்: 177950/14.09.15 )அளிக்கப்பட்டது’.

அதனைத் தொடர்ந்து மன்னரின் சிலையை திறக்க உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் வழக்கு (W.P(MD)No 17195/2015) தொடுத்தார். வழக்கு 23.09.15 அன்று நீதியரசர் ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது மறத்தமிழர் சேனை சார்பில் வழக்கறிஞர் சே.ஜெய கார்த்திக் அவர்கள் ஆஜராகி தமது திறமையான வாதத்தை எடுத்து வைத்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழக வருவாய் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி, நினைவகங்கள் துறை செயலாளர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசுத்தரப்பில் வெகுவிரைவில் சிலை திறக்க முடிவெடுக்கப் பட்டிருப்பதாகவும், அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நான்காம் தேதியே சிலை மூடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டு சிலை பீடம், படிகளுக்கு வர்ணம் பூசும் பணி துவங்கியது.

தமிழக அரசின் சார்பில் பிப்ரவரி-09-2016 அன்று சிலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த ரிபெல் சேதுபதி சிலை அலங்கரிக்கப்படிருந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் காலை 11.00 மணியளவில் திறந்து வைத்தார். இராமநாதபுரத்தில் மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் அவர்கள், மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் ஆதி.முருகன் அவர்கள், பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், இராமநாதபுரம் மன்னர் ந.குமரன் சேதுபதி அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா அவர்கள், முதுகுளத்தூர் நிலவள வங்கியின் தலைவரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.தர்மர் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.சுந்தரபாண்டியன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.சி.ஆணிமுத்து அவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செயலாளர் ஆ.ஆடலரசன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா மருது அவர்கள், நூர் முகமது அவர்கள், முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க நிர்வாகிகள், பசும்பொன் தேசிய கழகம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி முரளி தேவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.