Wednesday, May 16, 2012

kkkkkk

முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்குஏற்கனவே  சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

                       

                              இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்.


நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும்  மறத்தமிழர்  சேனையின்  கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்

Thursday, April 26, 2012

வீரமிகு தேவரினமே ! விழித்தெழு !

வீரமிகு தேவரினமே நீ விழித்தெழும் காலம் வந்துவிட்டது.அமைதியின் பெயரால் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இமை மூடிக்கிடக்க வேண்டும்?

அடித்திடச் சீறுகின்ற ஆற்றலின் வர்க்கம் நீ!
உன் துடித்திடும் தோள்கள் எங்கே?
வெடித்திடும் வெற்றி முழக்கமெங்கே?
சரித்திரம் சுழழும் போதும், சமுத்திரம் குமுறும் போதும் 
பொறுத்தவன் பொங்கியெழும் போதும்,
புயல் காற்று சீறும் போதும்,
எரிமலை வெடிக்கும் போதும், இனமானம் சிதறும் போதும்
எதிர்த்தவன் வென்றதில்லை,
எவரும் இதை மறுப்பதில்லை;

பாண்டியனின் பங்காளி நீ! சோழனின் சொந்தம் நீ! சேரனின் சந்ததி நீ! மூவேந்தர், முக்கொடி, முத்தமிழ் என மும்முரசார்த்து, செங்கோலோச்சிச்  செழுங்கலை வளர்த்து. அறநெறி வழுவா அரசர்களும், நடுநிலை பிறவா நாயகர்களும், கொள்கையிற் சிறந்த கோமான்களும், நானிலம் போற்ற நாடாண்ட நங்கையர் திலகங்களும், அடிமையிருள் நீக்கப் பாடுபட்ட அடலேறுகளும், விடுதலைப்பண்பாடி வீறுகொண்டெழுந்த வீராமணிகளும் தோன்றிய  

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன்

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர்.

Wednesday, March 21, 2012

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள்

றத்தமிழர் சேனை கமுதி ஒன்றியத்தின் சார்பில்  நான்மாடக் கூடல் மதுரை மாநகரில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் மன்னர்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் மகாலில் 20-03-2012 செவ்வாய்கிழமை  அன்று மாலை 3 00  மணியளவில் மறத்தமிழர் சேனை  கமுதி ஒன்றிய செயலாளர் S.ராமசெல்வம் தலைமையில் நடைபெற்றது.


முன்னதாக கமுதி நகர் மாணவர் சேனை செயலாளர் S.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர், கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா, மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டத்தில் சிங்கப்புலியாபட்டி மாயகண்ணன், ராமநாதன், சண்முகவேல் , கண்ணன் மற்றும் பெருந்திரளான  இளைஞர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கமுதி ஒன்றிய மாணவர் சேனை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.  


 வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மறத்தமிழர் சேனையின் சார்பில்  மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.


கமுதி கோட்டைமேடு தேவர்சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா,  மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.



கமுதி நகர் முழுவதும் நடைபெற்ற வாகனப்பேரணி மற்றும் இருசக்கர வாகனப்பேரணி


மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், சிங்கப்புலியாபட்டி கண்ணன்,  கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர்,   மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா,  மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.


விழா மேடையை நோக்கி மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து  மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து  கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து    மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து     மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக்  அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்  விழாவை சிறப்பித்து  சிறப்புரை நிகழ்த்தினார்.


மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.



வள்ளல்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினரில் சில பகுதி...